Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 28 July 2022 4:58:06 PM

கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 30 ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. மேலும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு, கலை அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த அனைவருமே கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

private employment camp,cuddalore ,தனியார் வேலைவாய்ப்பு முகாம்,கடலூர்

இதனை அடுத்து விருப்பமும் தகுதியும் பெற்ற இளைஞர்கள் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு துறையின் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூா், கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள வள்ளலாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான தகவலை அறிய விரும்பினால் 04142-290039, 9499055908 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :