கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Wed, 24 Aug 2022 1:19:27 PM
கள்ளக்குறிச்சி : அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.
எனவே அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதம் தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 26ம் தேதி 4- வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து இந்த முகாமில் ஒசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொள்ள உள்ளது. இந்த நிறுவனம் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தில் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 2021 – 2022-ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துக்கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாதம் பயிற்சியுடன் ரூ.15,000 ஊதியமும் வழங்கப்படும். மேலும் அத்துடன் உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி போன்றவை செய்து தரப்படும். உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.