Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் ஜூலை 2ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 30 June 2022 7:31:13 PM

திருப்பூர் மாவட்டத்தில்  ஜூலை 2ம் தேதி  தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர்: தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இதையொட்டி ஜூலை 2ம் தேதி அன்று திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் ஸ்ரீ மகாராஜா மஹாலில் தனியார் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.

அத்துடன் இம்முகாம் மூலமாக தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்முகாம் மூலமாக 15000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

employment,tirupur ,வேலைவாய்ப்பு ,திருப்பூர்

மேலும் இம்முகாமில் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து கொண்டிருப்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ப பணிகளை பெற்று கொள்ளலாம்.

இம்முகாம் மூலமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. ஆகையால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த முகாமினை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பை பெற்று கொள்ளுமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags :