Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 11 Aug 2022 2:46:56 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி : தமிழகத்தில் பல இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் இது தொடர்பான அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்பட்டு வருகிற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தனியார் துறை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

private employment camp,thoothukudi ,தனியார் வேலைவாய்ப்பு முகாம் ,தூத்துக்குடி

இதையடுத்து இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அத்துடன் டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் தனியார்த்துறை நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தொகுப்பு, மற்றும் தங்களின் கல்விச்சான்றிதழ் உள்ளிட்டவை கொண்டு வர வேண்டும்.

மேலும் இந்த முகாமில் தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு தனியார் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 0461 2340159 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :