Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 10 Aug 2022 8:39:57 PM

சென்னையில் 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், 2 வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாக கருதப்பட்டு கொண்டு வருகிறது.

அதாவது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன. இதன் மூலம் 2 வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று கொண்டு வருகின்றனர்.

அதன்படி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 12.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

private sector employment camp,chennai , தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ,சென்னை

மேலும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் போன்ற கல்வித்தகுதியை உடைய அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதை அடுத்து இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் வேலையாளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பலன் பெற்று கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Tags :