Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரத்தில் வருகிற பிப்.11ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வருகிற பிப்.11ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 01 Feb 2023 7:07:10 PM

விழுப்புரத்தில் வருகிற பிப்.11ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் : தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் வருகிற பிப். 11-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.அதில் 150-க்கு அதிகமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் 20,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இம்முகாம் சாணக்யா பள்ளியில் வருகிற 11-ம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற இருக்கிறது.

villupuram,employment camp ,விழுப்புரம் ,வேலைவாய்ப்பு முகாம்

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை முதுகலை படிப்பு முடித்தவர்கள், டிப்ளமோ, பொறியியல் படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/162301310011 என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்

Tags :