Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 27ம் தேதி கோயம்புத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வரும் 27ம் தேதி கோயம்புத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 17 Nov 2022 3:24:24 PM

வரும் 27ம் தேதி  கோயம்புத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் .... தமிழகத்தில் சமீப காலமாகவே அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் வரும் 27ம் தேதி கோயம்புத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, கட்டுமான துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.முகமானது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

employment camp,coimbatore ,வேலைவாய்ப்பு முகாம் ,கோயம்புத்தூர்

இதையடுத்து இந்த முகாமின் மூலம் சுமார் தனியார் துறைகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது வேலை தேடி வரும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8ம் வகுப்பு முதல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் இந்த மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பில் பங்கேற்கலாம். இதில் work from home வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளதால் பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் அத்துடன் முகாமில் அயல்நாட்டு வேலை வாய்ப்பை பெற விரும்புபவர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :