செங்கல்பட்டில் ஆகஸ்ட் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Mon, 08 Aug 2022 8:30:14 PM
செங்கல்பட்டு : கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான தொழில்துறைகள் மிகப்பெரிய சரிவை அடைந்தன. இதனால் பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்து உரிய வருமானம் இன்றி மிகவும் கடினமான சூழலில் தள்ளப்பட்டனர்.எனவே தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் எண்ணத்துடனும் அரசு சார்பில் மாவட்டம்தோறும் வாரந்தோறும் தனியார் / அரசு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை உரிய முறையில் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேண்பாக்கம் அரசு வளாகத்தில் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேலும் இது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.10, 12ம் வகுப்பு, ITI, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும் பங்கேற்கலாம்.
அரசின் இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கலாம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ள இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வி சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு) உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டியது அவசியம். எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.