Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜூலை 2ம் தேதி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜூலை 2ம் தேதி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 28 June 2022 5:24:53 PM

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜூலை 2ம் தேதி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் : கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பிற்கு ஏற்ப வேலைகளை தேர்ந்தெடுப்பதில் மிகப் பெரிய சிரமத்தை எதிர்கொள்கின்றனர். படிப்பிற்கேற்ற வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்..

இவ்வாறு வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் ஜூலை 2ம் தேதி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

employment camp,tiruppur ,வேலைவாய்ப்பு முகாம்,திருப்பூர்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவை சார்பில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

இதில் 10 ,12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் ஓட்டுநர்கள், தையல் பயின்றவர்கள், தொழிற் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்க இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :