Advertisement

பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 01 Mar 2023 10:33:58 AM

பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ..... பெரம்பலூர் ஆட்சியர் கற்பகம் அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

employment camp,perambalur ,வேலைவாய்ப்பு முகாம்  ,பெரம்பலூர்

இதனை அடுத்து இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, கலை - அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் (இருபாலர்) இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :