Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 24 Nov 2022 1:35:07 PM

இந்த  மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் : நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ..... இது தொடர்பாக ஆட்சியர் ரமண சரஸ்வதி அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-ஆம் மற்றும் 4-ஆம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று கொண்டு வருகிறது.

எனவே அதன்படி நாளை வெள்ளிக்கிழமை அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

employment camp,ariyalur ,வேலைவாய்ப்பு முகாம்,அரியலூர்

இம்முகாமில் 18 முதல் 35 வயது வரையிலான ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

மேலும், விவரங்களுக்கு 04329 - 228641 என்ற தொலைபேசி எண் (அல்லது) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :