Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை

ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை

By: Karunakaran Mon, 05 Oct 2020 3:52:09 PM

ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் உயிரிழந்தார். இந்த குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்காவும் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், மாவட்ட கலெக்டர் தங்களை மிக மோசமாக நடத்தியதாக ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆயினும், கலெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரை பாதுகாப்பது யார்? அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். குடும்பத்தினர் நீதி விசாரணை கேட்கும்போது, சி.பி.ஐ. விசாரணை என்றும், சிறப்பு புலனாய்வு விசாரணை என்றும் திசைதிருப்புவது ஏன்? என்று கேள்வி கூறியுள்ளார்.

priyanka,mayawati,hadras,collector ,பிரியங்கா, மாயாவதி, ஹத்ராஸ், கலெக்டர்

மேலும் அவர் உத்தரபிரதேச அரசு, தூக்கத்தில் இருந்து சற்று எழுந்தாலும் கூட குடும்பத்தினரின் கருத்துகளை கேட்க வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் தங்களை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும், உத்தரபிரதேச அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தபோதிலும், கலெக்டர் அங்கு இருக்கும்போது எப்படி பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். எனவே, கலெக்டரை இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநில அரசின் செயல் குறித்து மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று கூறினார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|