Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் நாளை முதல் 2 நாட்கள் பிரியங்கா காந்தி பிரச்சாரம்

கர்நாடகாவில் நாளை முதல் 2 நாட்கள் பிரியங்கா காந்தி பிரச்சாரம்

By: Nagaraj Mon, 24 Apr 2023 6:14:20 PM

கர்நாடகாவில் நாளை முதல் 2 நாட்கள் பிரியங்கா காந்தி பிரச்சாரம்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (ஏப்ரல் 25, 26) நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை அவர் கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

election,priyanka,rahul, ,பிரச்சாரம், பிரியங்கா காந்தி, மறுநாள்

டி.நரசிபுரம் கெலவரகண்டியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார். அதன்பின் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரி சங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணி முதல் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தியும் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|