Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி... மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்

பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி... மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்

By: Nagaraj Thu, 15 June 2023 11:26:44 PM

பிரச்சாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி... மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடக்கி உள்ளது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன.

excitement,congress party,priyanka,election,campaign ,உற்சாகம், காங்கிரஸ் கட்சியினர், பிரியங்கா, தேர்தல், பிரசாரம்

இம்மாநிலத்தை பொறுத்தவரை பல சட்டசபை தொகுதிகளின் வெற்றி, தோல்வி பெண் வாக்காளர்கள் கையில் உள்ளது. இதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க பாரதிய ஜனதா அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரசும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என தெரிவித்து உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்தியபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags :