Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான நிதிஒதுக்கீடு ..அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான நிதிஒதுக்கீடு ..அரசாணை வெளியீடு

By: vaithegi Tue, 18 July 2023 09:59:18 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான   நிதிஒதுக்கீடு ..அரசாணை வெளியீடு

சென்னை: இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் 2023-2024-ம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் கூடுதலாக நிதி ரூ.450.00 லட்சம் ஒப்பளிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

இதையடுத்து இருகால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் 2011-2012-ம் நிதியாண்டு முதல் துவக்கப்பட்டு, நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.

ordinance,disabled ,அரசாணை ,மாற்றுத்திறனாளி


2018-2019-ம் நிதியாண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 52 நலத் திட்டங்கள் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்குள் செயல்படுத்திட மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு அதிகாரப் பகிர்வு (Delegation of Power) வழங்கி ஆணையிடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 17.04.2023 அன்று நடைபெற்ற இந்த துறையின் மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். எனவே அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Tags :