Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை.. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை.. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

By: vaithegi Mon, 18 July 2022 5:59:07 PM

ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை.. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

தமிழ்நாடு : தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுவதுமாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர். மேலும் இந்த ஆய்வு கூட்டங்கள் 2-ம் கட்டமாக 5 மண்டலங்களுக்கு நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு மண்டலத்தில் 2 நாட்கள் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

department of school education,proposed schedule,study meeting ,பள்ளிக்கல்வித்துறை ,உத்தேச அட்டவணை,ஆய்வுக் கூட்டம்

மேலும் இந்த கூட்டத்தின் முதல் நாளில் சார்ந்த இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பள்ளிகளை பார்வை மேற்கொள்வர்.2-ம் நாள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

02.08.2022 & 03.08.2022 – செங்கல்பட்டு (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)
10.08.2022 & 11.08.2022 – கடலூர் (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)
16.08.2022 & 17.08.2022 – திருச்சி (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)
23.08.2022 & 24 .08.2022 – விருதுநகர் (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)
01.09.2022 & 02.09.2022 – தருமபுரி (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

Tags :