உங்கள் உடல் நலனை பாதுகாப்பதுடன் அடுத்தவர் உடல் நலனை பாதுகாக்க வேண்டும் - கிரண்பேடி
By: Monisha Mon, 08 June 2020 6:06:47 PM
புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் அங்கு 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 52 ஆக உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் மால்கள், உணவகங்கள், மருத்துவமனை சிகிச்சை பிரிவுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கவனம் அவசியம். முகக்கவசம் அணியுங்கள். உங்கள் உடல் நலனை பாதுகாப்பதுடன் அடுத்தவர் உடல் நலனை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருக்கும் உண்டு. இது மிகவும் சவாலான காலம். அனைவரும் மற்றவரின் உடல்நலனை மதித்து பாதுகாப்புடன் நடப்பது அவசியம். கவனத்துடன் இருங்கள் என்பதே எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.