Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து போராட்டம்... முதல்வர் மம்தா அறிவிப்பு

மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து போராட்டம்... முதல்வர் மம்தா அறிவிப்பு

By: Nagaraj Tue, 21 Mar 2023 7:33:15 PM

மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து போராட்டம்... முதல்வர் மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மக்கள் மீது மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து வரும் 29, 30ம் தேதிகளில் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 100 நாள் வேலைக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூட நமது மாநிலத்துக்கு எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, மேற்கு வங்க மக்கள் மீது மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து வரும் 29, 30ம் தேதிகளில் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, ஒரு சில நபர்களே இந்த நாட்டை நடத்தி செல்கின்றனர். அதானி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் அவர்களது சிறந்த நண்பர்களாக உள்ளனர். அந்த மக்களுக்காக மட்டுமே பா.ஜ.க. வேலை செய்து வருகிறது என்று, ரெட்-கார்னர் நோட்டீஸ் பட்டியலில் இருந்து மெகுல் சோக்சியின் பெயர் நீக்கப்பட்டது பற்றி அவர் கூறியுள்ளார்.

authoritarianism,central government,mamata,struggle , சர்வாதிகார போக்கு, போராட்டம், மத்திய அரசு, மம்தா

13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்ஸிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீசை இன்டர்போல் ரத்து செய்துள்ளது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது.

பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் எந்த பாதிப்பும் இதனால், ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.

ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இனி அந்த ஆபத்து அவருக்கு இருக்காது என்று கூறப்படுகிறது.

Tags :
|