Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 27 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

சென்னையில் 27 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

By: Monisha Tue, 08 Dec 2020 11:53:53 AM

சென்னையில் 27 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் இன்று போராட்டம் நடத்தினர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் கே. ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

farmers,union,support,struggle,full closure ,விவசாயிகள்,தொழிற்சங்கம்,ஆதரவு,போராட்டம்,முழுஅடைப்பு

பெரம்பூர் அம்பேத்கார் கல்லூரி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு சுதர்சனம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அம்பத்தூர் பஸ் நிலையம், ஆவடி அண்ணா சிலை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதற்கிடையே இன்று காலை சென்னையில் உள்ள 36 போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags :
|