முதல்வர் பிறந்தநாளை ஒட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By: Nagaraj Sat, 11 Mar 2023 6:55:48 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூர் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரூர் திமுக செயலாளர் கபிலன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் கோவி அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.கே.முத்துச்செல்வன் கலந்துகொண்டு அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் உள்ள 50 நோயாளிகளுக்கும், 50 பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் புடவைகள், காலை உணவு, பால், பிரட் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் அறிவழகன், தமிழ்வாணன், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, புஷ்பா சக்திவேல், சமீரா பர்வீன், சித்திக், ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், பேரூர் துணை செயலாளர்கள் உதயகுமார்,கோபிநாத்,பவானி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கோபி, ஒன்றிய பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.