Advertisement

பிஆர்எஸ் கட்சி மேலவை உறுப்பினர் கவிதா உண்ணாவிரதம்

By: Nagaraj Sat, 11 Mar 2023 11:49:16 PM

பிஆர்எஸ் கட்சி மேலவை உறுப்பினர் கவிதா உண்ணாவிரதம்

புதுடெல்லி: பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றக்கோரி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லி ஐந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். இந்த மசோதா நிறைவேறும் வரை கவிதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் கவிதா அழைப்பு விடுத்திருந்தார்.

cm,daughter,kavitha, ,இடஒதுக்கீடு, உண்ணாவிரதம், கவிதா

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கவிதாவின் இந்த முயற்சி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கவிதா கூறுகையில், “”இந்தியா முன்னேற, அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 27 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் நிறைவேற்றுவோம் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது,” என்றார்.

டெல்லி மதுக்கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு கவிதா வரும் 9ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இடஒதுக்கீடு போராட்டத்தை கருத்தில் கொண்டு அன்று நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கவிதா கோரினார். இதையடுத்து, அமலாக்கத் துறையின் உத்தரவின்படி, கவிதா இன்று வழக்கில் ஆஜரானார்.

Tags :
|