Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது

By: Monisha Sat, 07 Nov 2020 10:47:51 AM

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட், இன்று மாலை 3.02 மணிக்கு 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது.

பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

pslv,c49 rocket,countdown,scientists,satellite ,பி.எஸ்.எல்.வி,சி-49 ராக்கெட்,கவுண்ட்டவுன்,விஞ்ஞானிகள்,செயற்கைகோள்

இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்ணில் ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) ஏவப்படுகிறது. திட்டமிட்டபடி, 26 மணி நேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று 4-வது நிலைக்கான எரிபொருளை நிரப்பும் பணியை நிறைவு செய்தனர். தொடர்ந்து விஞ்ஞானிகள் ராக்கெட்டின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|