Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பி.எஸ்.எல்.வி. சி-49 நாளை விண்ணில் பாய்கிறது... கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது!

பி.எஸ்.எல்.வி. சி-49 நாளை விண்ணில் பாய்கிறது... கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது!

By: Monisha Fri, 06 Nov 2020 11:50:26 AM

பி.எஸ்.எல்.வி. சி-49 நாளை விண்ணில் பாய்கிறது... கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட், நாளை மாலை 3.02 மணிக்கு 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு:-

பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.

pslv,c49 rocket,countdown,scientists,satellite ,பி.எஸ்.எல்.வி,சி-49 ராக்கெட்,கவுண்ட்டவுன்,விஞ்ஞானிகள்,செயற்கைகோள்

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்டது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட். இது இந்தியாவின் 51-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

இதற்கான இறுதிக்கட்ட பணியான 26 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து 'கவுண்ட்டவுனை' முடித்து கொண்டு திட்டமிட்டப்படி நாளை மாலை 3.02 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

Tags :
|