Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு குறித்த அறிப்பு வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு குறித்த அறிப்பு வெளியீடு

By: vaithegi Mon, 08 May 2023 1:48:30 PM

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு குறித்த அறிப்பு வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11 -ம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6 -ம் தேதி முதல் ஏப்ரல் 20 -ம் தேதி வரை நடைபெற்றது.

இதற்கு இடையே 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவு குறித்த அறிவிப்பையும் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு உ ள்ளார்.

public examination,school education department ,பொதுத் தேர்வு ,பள்ளிக் கல்வித் துறை

அதாவது, தமிழகத்தில் மட்டுமே 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர். மேலும், 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 17 -ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் பரவி வந்தன.

ஆனால், தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை வருகிற மே 19- ம் தேதி வெளியிட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

Tags :