Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கனில் கொலையாளிக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்கனில் கொலையாளிக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்

By: Nagaraj Fri, 09 Dec 2022 10:38:57 AM

ஆப்கனில் கொலையாளிக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முறையாக பொது வெளியில் கொலையாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. அதுவும் பாதிக்கப்பட்டவரின் தந்தை துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் பல்வேறு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடும் தண்டனைகளும் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் முதல்முறையாக கொலையாளி ஒருவருக்கு முதன்முறையாக பொதுவெளியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

criminal,public space,military officers,taliban,punishment ,குற்றவாளி, பொதுவெளி, ராணுவ அதிகாரிகள், தாலிபான்கள், தண்டனை

இந்த மரணதண்டனையை பாதிக்கப்பட்டவரின் தந்தையே 3 முறை துப்பாக்கியால் சுட்டு நிறைவேற்றினார் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தென் மேற்கு மாகாணமான பாராவில் உள்ள நெரிசலான மைதானம் ஒன்றில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை தாலிபான் அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர். முன்னதாக பாதிக்கப்பட்டவரின் தாயாரிடம் தாலிபான் தலைவர்கள், குற்றவாளியை மன்னிக்குமாறு கோரி உள்ளனர்.

ஆனால் இந்த தண்டனை பிறருக்கு பாடமாக அமைய வேண்டும் என்று கூறி தண்டனையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

Tags :