Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தினமும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை ஆணை பிறப்பிப்பு

தினமும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை ஆணை பிறப்பிப்பு

By: vaithegi Sat, 30 Sept 2023 10:25:03 AM

தினமும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை ஆணை பிறப்பிப்பு

சென்னை: தினமும் காய்ச்சல் முகாம்களை நடத்த ஆணை வெளியீடு ... தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் 1000 இடங்களில் மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குனர்கள் நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை ஆணை பிறப்பித்து உள்ளது.

எனவே அதன்படி அனைத்து மண்டலங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்த உத்தரவிட்டு உள்ளது.

public health department order,fever ,பொது சுகாதாரத்துறை ஆணை,காய்ச்சல்


இதனை அடுத்து அதன்படி டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும்

தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள் காய்ச்சல் விபரங்களை சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags :