தலைநகர் டெல்லியில் செப்.8 முதல் செப்.10 வரை பொதுவிடுமுறை
By: vaithegi Wed, 23 Aug 2023 3:01:22 PM
டெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு வருகிற செப். 8 முதல் செப்.10 வரை பொது விடுமுறை விடுவதாக அரசு அறிவிப்பு .. டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டை கருத்தில் கொண்டு
வருகிற செப்டம்பர் 8-10 வரை பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கும் திட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (ஆக 22) ஒப்புதல் அளித்து உள்ளார். எனவே அதன் படி அலுவலகங்கள் மற்றும் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் 3 நாட்களுக்கு செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்த நகரில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களை மூடுவது குறித்த வழிமுறைகளை வழங்க காவல்துறையின் சிறப்புக் காவல் ஆணையர் மதுப் திவாரி, தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த ஜி20 உச்சி மாநாடு செப் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் முக்கிய உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.