Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

By: vaithegi Wed, 06 July 2022 9:00:48 PM

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

திருப்பூர் : தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, குடிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

public holiday,tirupur ,பொது விடுமுறை ,திருப்பூர்

அதனால் அவினாசி ஒன்றியத்தில் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், அய்யம்பாளையம் 6-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் இச்சிப்பட்டி 1-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் 1-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

மேலும் செலவாணி முறிவுச்சட்டம் 1881ன்படி, தேர்தல் நடைபெறும் கிராம ஊராட்சி பகுதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்படுகிறது .எனவே, அப்பகுதிகளை சேர்ந்த அனைத்து தொழில், வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு, 9ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கவேண்டும்.என மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவித்துள்ளார்.

Tags :