Advertisement

அதிகரிக்கும் டெங்கு நோய் .. அச்சத்தில் பொதுமக்கள்

By: vaithegi Fri, 06 Oct 2023 3:25:22 PM

அதிகரிக்கும் டெங்கு நோய் ..  அச்சத்தில் பொதுமக்கள்


சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் டெங்கு கொசு பாதிப்பு அதிகரித்து உள்ளது. அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

public,dengue ,பொதுமக்கள்,டெங்கு

மேலும் டெங்கு பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை சுற்றி குப்பைகள் சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போன்று மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கவிடாமலும்,

தண்ணீர் பிடித்து வைத்தால், அதனை மூடி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்குவால் பள்ளி மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.


Tags :
|