Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் நாட்டில் அதிபர் லூகாஷென்கோ பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டம்

பெலாரஸ் நாட்டில் அதிபர் லூகாஷென்கோ பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டம்

By: Karunakaran Sun, 23 Aug 2020 3:36:35 PM

பெலாரஸ் நாட்டில் அதிபர் லூகாஷென்கோ பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பெலாரஸ் பிரிந்து தனி நாடானது. பெலாரஸ் நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றி பெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்நாட்டில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றபோது, அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். இந்நிலையில் இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என பொதுமக்களும், எதிர்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

public protest,belarus,resignation,president lukashenko ,போராட்டம், பெலாரஸ், ராஜினாமா, ஜனாதிபதி லுகாஷென்கோ

போராட்டக்காரர்களின் கோரிக்கையை அதிபர் அலெக்சாண்டர் நிராகரித்துள்ளார். போராட்டம் அதிகரித்ததால், பெலாரஸ் நாட்டின் எல்லைகள் வலுப்படுத்தப்பட்டன. பெலாரசில் தற்போது நடைபெற்ற தேர்தலில் அலெக்சாண்டர் வெற்றிபெற்று 6-வது முறையாக அதிபரானதாக அறிவிக்கப்பட்டதற்கு பல ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 37 வயது நிரம்பிய முன்னாள் ஆங்கில ஆசிரியையான எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா பேட்டி அளித்தபோது, அலெக்சாண்டர் எங்களிடம் அரசாங்கத்தை அமைதியாக ஒப்படைக்க வேண்டும். அவருக்கு வேறு வழி இல்லை. அவர் பேச்சுவார்த்தைக்கு விரைவாக வரவேண்டும். பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். 26 ஆண்டுகால பயத்திற்கு பின்னர் பெலாரசின் மக்கள் பயத்தை விடுத்து அவர்களது உரிமைக்காக போராட தயாராகி விட்டனர். அதை நினைத்து நான் பெருமைபடுகிறேன். பெலாரசின் மக்கள் நாங்கள் தான். நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று கூறினார்.

Tags :