அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
By: vaithegi Mon, 29 May 2023 09:38:36 AM
சென்னை: இன்று தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் தொடர்பான கலந்தாய்வு ...... தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. இதனை அடுத்து நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
ஆசிரியர்கள் இதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்
பட்டது. பள்ளிக்கல்வித்துறையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து இச்சூழலில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை கூறியிருந்தது.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார். எனினும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி 2022- 2023 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.