Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உளுந்தூர்பேட்டை ,திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியீடு

உளுந்தூர்பேட்டை ,திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியீடு

By: vaithegi Thu, 18 Aug 2022 2:36:01 PM

உளுந்தூர்பேட்டை ,திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியீடு

சென்னை: உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை போன்ற சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் அதிகரிக்கப்படுகிறது. உயர்த்தப்பட உள்ள புதிய கட்டணத்தின் விவரங்கள் வெளியாகி உள்ளன . இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனேவ அதன்படி 4 சக்கர வாகனங்களுக்கான ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 55-லிருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 85-லிருந்து 100 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் ரூ.1,960 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைபோன்று மினி லாரி, இலகுரக வாகன போக்குவரத்து வாகனங்களுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் 115 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் 170 ரூபாய் ஆகவும், மாத கட்டணம் ரூ.3,435 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

customs house,ulundurpet,tirumanthurai ,சுங்கச்சாவடி,உளுந்தூர்பேட்டை ,திருமாந்துறை

மேலும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 200-லிருந்து 230 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 300-லிருந்து 345 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன் மாத கட்டணம் ரூ.6,870 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதைபோன்று பல அச்சுகள் கொண்ட கனரக வணிக மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒருமுறை பயணக் கட்டணம் ரூ. 320 -லிருந்து 370 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில் பலமுறை பயணம் செய்தவதற்கான கட்டணம் ரூ. 480-லிருந்து 550 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. இவ்வகை வாகனங்களுக்கு மாத கட்டணம் ரூ.11,035 ஆகவும் தற்போது வசூலிக்கப்பட உள்ளது.

Tags :