9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு
By: vaithegi Tue, 04 Apr 2023 10:27:42 AM
சென்னை: தமிழ்நாட்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.
எனவே அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 24 -ஆம் தேதி வரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என்று திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 21 முதல் 28 வரை ஆண்டு தேர்வு நடைபெறும் என அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்திருக்கிறார். இதேபோன்று அந்தந்த மாவட்டங்களுக்கும் தனித்தனியே ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி எந்த வித புகார்களுக்கும் இடம் அளிக்கா வகையில் தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு தேர்வுக்கான முழு கா