காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
By: vaithegi Sat, 22 Apr 2023 12:52:54 PM
சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன்படி, மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியல் தக்க வைத்து கொள்ளுதல் உள்ளிட்டவை தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் அதிலும் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்க குறிக்கோள் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இதையடுத்து இதற்கு முன் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது .