Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்...புதுச்சேரி முதல்வர் இரங்கல்

வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்...புதுச்சேரி முதல்வர் இரங்கல்

By: Monisha Sat, 29 Aug 2020 12:31:33 PM

வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்...புதுச்சேரி முதல்வர் இரங்கல்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.

இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜர் அரங்கத்தில் எச்.வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் புதுச்சேரி முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி.யுமான வசந்தகுமார் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

puducherry,cm narayanasamy,shock,tribute,condolences ,புதுச்சேரி,முதல்வர் நாராயணசாமி,அதிர்ச்சி,அஞ்சலி,இரங்கல்

என்னுடன் நெருங்கி பழகியவர். எப்போதும் சுறுசுறுப்பானவர். தனது உழைப்பால் உயர்ந்தவர். உழைப்புக்கு உதாரணமாக இருந்தவர். தமிழகத்தில் சிறந்த வர்த்தகராக இருந்தவர். அரசியலில் வர்த்தகத்தை ஒருபோதும் அவர் கலந்ததில்லை. தனது உழைப்பால் எம்.எல்.ஏ., எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவரது இழப்பு மிகப்பெரிய பேரிழப்பு.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியை வலுவாக வளர்த்தவர். அவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

Tags :
|