Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5ம் தேதி புதுச்சேரி மதுக்கடைகளுக்கு பூட்டு... வள்ளலார் தினத்தை ஒட்டி நடவடிக்கை

5ம் தேதி புதுச்சேரி மதுக்கடைகளுக்கு பூட்டு... வள்ளலார் தினத்தை ஒட்டி நடவடிக்கை

By: Nagaraj Thu, 02 Feb 2023 10:31:33 PM

5ம் தேதி புதுச்சேரி மதுக்கடைகளுக்கு பூட்டு... வள்ளலார் தினத்தை ஒட்டி நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிப்ரவரி 5-ம் தேதி அன்று மதுவிற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளலார் தினத்தை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடலூரில் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வடலூரில் நிறுவப்பட்டுள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும்.

february,public,safety,sale of liquor,prohibition,vallalar ,பிப்ரவரி, பொதுமக்கள், பாதுகாப்பு, மது விற்பனை, தடை, வள்ளலார்

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு வரும் 5-ம் தேதி அன்று வள்ளலார் ஜோதி தினம் நடைபெற உள்ளது. எனவே இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிப்ரவரி 5-ம் தேதி அன்று மதுவிற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதனை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|