புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவுக்கு பலி
By: Nagaraj Tue, 28 July 2020 10:16:46 AM
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனாவுக்கு பலியான சம்பவம் கட்சி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவி வந்தாலும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் மிகதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகம் பாதித்த நகரங்களில் ஒன்றாக சென்னை உள்ளது.
தற்போது புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அங்கும் தமிழகத்தை போன்று எம்எல்ஏக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
அந்த
வகையில் புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்
கட்சியின் பொதுச் செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து
கடந்த 23ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார்
மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அங்கு
சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பாலன்
உயிரிழந்தார். பாலனுக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் இருந்தது
குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.