Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் ... கல்வி அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் ... கல்வி அமைச்சர் அறிவிப்பு

By: vaithegi Wed, 31 May 2023 11:08:21 AM

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் ...  கல்வி அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி : கோடை வெயிலின் தாக்கம் உயர்ந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதியை தவிர்த்து வருகிற ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போலவே, புதுச்சேரி அரசும் அறிவித்து இருந்தது.

தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பை அந்த மாநில உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார். புதுச்சேரி மாநிலதிற்குட்பட்ட 1 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வருகிற ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

education minister,puducherry ,கல்வி அமைச்சர்,புதுச்சேரி

மேலும், பள்ளி மாணவர்களுக்கு சத்தான சிறுதானிய உணவுகள் மாலை நேர சிற்றுண்டியாக வழங்கப்பட உள்ளது என்றும், அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த சிற்றுண்டி திட்டமானது புதுச்சேரியில் அனைத்து பிராந்திய அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Tags :