புதுச்சேரி மாநிலத்தில் செப்.30 முதல் அக்.4 வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை
By: vaithegi Sat, 02 Sept 2023 2:08:39 PM
புதுச்சேரி : தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு எப்போது என்பது குறித்தான பட்டியலை சமீபத்தில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுயி ருந்தது.
இதன் பின், காலாண்டு தேர்வு முடிவடைந்து 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் மற்றும் 4 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 2 -ம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து , புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வுகள் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 5 -ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.