Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 764-ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 764-ஆக உயர்வு

By: Monisha Wed, 15 July 2020 12:19:45 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 764-ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 764-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் இதுவரை 79 ஆயிரத்து 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,295 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 729 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 414 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 764-ஆக உயர்ந்துள்ளது.

Tags :