Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நேரத்தில் ரூ.75 ஆயிரம் வரை மளிகை பொருட்கள் வாங்கியவர்

ஒரே நேரத்தில் ரூ.75 ஆயிரம் வரை மளிகை பொருட்கள் வாங்கியவர்

By: Nagaraj Sun, 18 Dec 2022 10:52:18 PM

ஒரே நேரத்தில் ரூ.75 ஆயிரம் வரை மளிகை பொருட்கள் வாங்கியவர்

பெங்களூர்: பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தீபாவளி சமயத்தில் ஒரே நேரத்தில் 75 ஆயிரம் வரை மளிகைப் பொருட்களை இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார்.

பயனாளர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனமாக செயல்படுகிறது ஸ்விகி. ஆரம்பத்தில் சில பயனானர்பளை மட்டுமே வைத்திருந்த இந்நிறுவனம், இன்று பல லட்சம் பயனாளிகளுக்கு உணவு விநியோகம் செய்து வருகிறது.

இவர்களின் இன்னொரு செயலியான ஸ்விகி இன்ஸ்டா மார்ட், மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில், ஸ்விகி நிறுவனம் இந்த ஆண்டில் இந்திய வாடிக்கையாளர்கள் ஸ்விகியில் அதிகம் வாங்கிய உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

groceries,surprise,customers,year,diwali ,மளிகைப்பொருட்கள், ஆச்சரியம், வாடிக்கையாளர்கள், வருடம், தீபாவளி

இந்தியர்கள் ஸ்விகியில் அதிகம் வாங்கிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியவர்கள் எங்கெங்கு இருக்கின்றனர் என்ற பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், தீபாவளி சமயத்தில் ஒரே 75 ஆயிரம் வரை மளிகைப் பொருட்களை இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு வாடிக்கையாளர், இந்த வருடத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் மேல் மளிகைப் பொருட்களை வாங்கியுள்ளார். ஒரே ஆண்டில் ரூபாய் 16 லட்சத்திற்கும் அதிகமாக ஸ்விகி மூலமாக மளிகை பொருட்களை ஒருவர் வாங்கியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|