ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமருக்கு ராக்கியை அனுப்பிய கமர் மொஹ்சின் ஷேக்
By: Nagaraj Sun, 07 Aug 2022 8:44:49 PM
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், ரக்ஷா பந்தனை முன்னிட்டு அவருக்கு ராக்கியை அனுப்பியுள்ளார். மேலும் அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்தும், 2024 பொதுத் தேர்தலுக்கு வாழ்த்தும் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.
ராக்கியை முன்னிட்டு தாம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், இந்த முறை மோடியை சந்திக்க எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் கமர் கூறினார். "இந்த முறை அவர் என்னை டெல்லிக்கு அழைப்பார் என்று நம்புகிறேன். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். எம்பிராய்டரி டிசைனுடன் கூடிய ரேஷ்மி ரிப்பனைப் பயன்படுத்தி நானே இந்த ராக்கியை உருவாக்கினேன்" என்று கூறியுள்ளார்.
"அவர் மீண்டும் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவர் இதற்கு தகுதியானவர், ஏனென்றால் அவருக்கு அந்த திறன்கள் உள்ளன. மேலும்
ஒவ்வொரு முறையும் அவர் இந்தியாவின் பிரதமராக இருக்க வேண்டும் என்று நான்
விரும்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
கமர்
ஷேக் ஒவ்வொரு ஆண்டும் மோடிக்கு ராக்கி மற்றும் ரக்ஷா பந்தன் அட்டையை
அனுப்பி வருகிறார். கமர் ஷேக் திருமணத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து
இந்தியாவுக்கு வந்து இந்தியாவில் வசித்து வருகிறார். 24-25 ஆண்டுகளுக்கும்
மேலாக மோடிக்கு ராக்கி கட்டி வருவதாக பாகிஸ்தான் வம்சாவளி பெண் கூறினார்.