Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் நடைபெறவுள்ளது

மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் நடைபெறவுள்ளது

By: vaithegi Thu, 31 Aug 2023 10:50:13 AM

மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் நடைபெறவுள்ளது

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

எனவே அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

quarterly and seasonal examinations ,காலாண்டு , பருவத் தேர்வுகள்

இதையடுத்து அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15-ம் முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :