Advertisement

இங்கிலாந்து மகாராணி உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம்

By: Nagaraj Fri, 09 Sept 2022 09:27:27 AM

இங்கிலாந்து மகாராணி உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம்

இங்கிலாந்து: உடல்நலக்குறைவு... இங்கிலாந்து மகாராணி ராணி எலிசெபத் பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகும் நிலையில். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் ராணி எலிசபெத் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வேல்ஸ் இளவரசர், கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோர் ராணியுடன் உடன் இருந்தனர்.

england,queen,health,vulnerability,prime minister,twitter,concern ,இங்கிலாந்து, ராணி, உடல்நிலை, பாதிப்பு, பிரதமர், டுவிட்டர், கவலை

இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத்தலைவர்கள் பிரார்த்தனை தெரிவிப்பதாக கூறினர்

இதுகுறித்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ் டுவிட்டரில் இந்த மதிய உணவு நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் முழு நாடும் ஆழ்ந்த கவலையில் மூழுகி உள்ளது என கூறி இருந்தார்ர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் இன்று உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|