Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிட்னி பகுதியை சேர்ந்தவர்களுக்கு எல்லை மூடப்படுவதாக குயின்ஸ்லாந்த் அறிவிப்பு

சிட்னி பகுதியை சேர்ந்தவர்களுக்கு எல்லை மூடப்படுவதாக குயின்ஸ்லாந்த் அறிவிப்பு

By: Nagaraj Thu, 30 July 2020 6:31:06 PM

சிட்னி பகுதியை சேர்ந்தவர்களுக்கு எல்லை மூடப்படுவதாக குயின்ஸ்லாந்த் அறிவிப்பு

எல்லை மூடப்படும் என்று அறிவிப்பு... வடக்கு அவுஸ்ரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னஸ்டாசியா பலாஸ்ஸுக் (Annastacia Palaszczuk), சிட்னி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சனிக்கிழமை அதிகாலை முதல் இந்த மாநிலம் மூடப்படும் என அறிவித்துள்ளார்.

கிரேட்டர் சிட்னியை சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் குயின்ஸ்லாந்து அரசு ஒரு தொற்று பரவல் மையமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து குயின்ஸ்லாந்தின் முதல்வர் அன்னஸ்டாசியா பலாஸ்ஸுக் கூறுகையில், ‘வீடு திரும்ப விரும்பும் குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்களுக்கு அறிவிப்பு கொடுப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் இதைச் செய்துள்ளோம்.

number,queensland,frontier,sydney,notice ,எண்ணிக்கை, குயின்ஸ்லாந்த், எல்லை, சிட்னி, அறிவிப்பு

நாங்கள் தற்போது அசாதாரண காலங்களில் இருக்கிறோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் சிட்னிக்கு பயணம் செய்யக்கூடாது. புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது திரும்பி வரும் குயின்ஸ்லாந்து குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் 14 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் செலவிட வேண்டும்’ என கூறினார்.

விக்டோரியாவில் புதன்கிழமை 295 தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மொத்த எண்ணிக்கையை 176ஆகக் கொண்டுவந்துள்ளது.

Tags :
|
|