குயின்ஸ்லேன்ட் நிறுவனம் ஆக்கிரமித்த இடம் மீட்பு.. என்ன நடந்தது?
By: Monisha Sat, 25 June 2022 9:09:11 PM
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் குயின்ஸ்லேன்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையபடுத்தினர். 32 ஏக்கர் நிலத்தை நீண்ட காலமாக இருந்த பிரெச்சனை தீர்வுக்கு வந்தது.
இந்த நிலம் பூந்தமல்லி அடுத்த காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்லஸ் நிறுவனம், குயின்ஸ்லேன்ட் என்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சொகுசு விடுதியை நடத்தி வருகிறது.
இடையில் இந்த நிலம் கோவில்க்கு சொந்தமானது என்பதற்கு ஆவணம் இல்லை என்று கூறி வருவாய்த்துறையினர் கோவில் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து உள்ளனர். அதை பயன்படுத்தி கொண்டு குத்தைகைகாலம் முடிவடைந்த பிறகும் குயின்ஸ்லேன்ட் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலகங்களை ஆக்கிரமித்து உள்ளது என்று வாதிட்டனர்.
இந்த நிலையில் இன்று இந்த இடம் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்தது. அது மட்டும் அல்லாமல் சில இடத்திற்கு சீல் வைத்தனர்.