Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு உயர்வு .. ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு உயர்வு .. ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

By: vaithegi Fri, 13 Oct 2023 3:26:08 PM

சென்னையில் கடந்த 3 மாதங்களாக டெங்கு பாதிப்பு உயர்வு   ..   ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

சென்னை: கோயம்பேடு பூ மார்கெட் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் கடந்த 3 மாதங்களாகவே டெங்கு பாதிப்பு அதிகமாகியுள்ளது;

எனினும் மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பீதி ஆக வேண்டாம்; நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தி ஆகும். வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில் தண்ணீர் சேகரித்து வகைக்கும் ட்ரம், தொட்டி போன்றவற்றை மூடியே வைக்க வேண்டும்.

radhakrishnan,dengue ,ராதாகிருஷ்ணன் ,டெங்கு


மேலும் காய்ச்சல் வந்தால் தாமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனையை அணுக வேண்டும். 3,317 பணியாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிக்கத் தொடர் பணி மேற்கொள்ளப்படுகிறது;

கடந்த மாதம் 80 பேருக்கு டெங்கு பாதித்த நிலையில், இந்த மாதம் 31 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல் வந்தால் தானாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும்; ஒவ்வொரு மாதமும் சாலைகளில் திரியும் 600 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது" என அவர் கூறினார்.

Tags :