இந்திய போர்க்கப்பலுடன் தொடர்பு கொண்ட ரபேல் விமானம்
By: Nagaraj Wed, 29 July 2020 2:41:00 PM
வருகிறது... இந்தியாவின் அம்பாலாவுக்கு வருகிறது ரபேல் விமானம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரான்சில் புறப்பட்ட ரபேல் ஜெட் போர் விமானம் இன்று மதியம் அம்பாலா விமானப் படை தளம் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்து. இங்கு ரபேல் விமானத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
சுமார் 7000 கி. மீட்டர் கடந்து இந்தியா வந்து கொண்டு இருக்கும் ரபேல் விமானம் மேற்கு அரபிக் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளது.
வரும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்டில் எரிபொருள் நிரப்புவதற்கு ரபேல்
விமானம் தரை இறங்கின. அங்கு எரிபொருள் நிரப்பிய பின்னர் இந்தியா நோக்கி
வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் இந்திய மண்ணில்
இறங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில்
இருந்து கொண்டே இந்தியாவில் இருக்கும் போர் கப்பலுடன் தொடர்பை
ஏற்படுத்திக் கொண்டது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு ஐஎன்எஸ்
கொல்கத்தாவும் பதில் அளித்துள்ளது. அது அளித்து இருக்கும் பதிலில்,
''இந்திய மண்ணுக்கு வாருங்கள். மகிழ்ச்சி. இந்தியக் கடலை காவல் காப்பதில்
உறுதி அளிக்கிறோம். மகிமையுடன் தரை இறங்கவும்'' என்று தெரிவித்துள்ளது.