பதவிக்காக ராகுல்காந்தி பாதயாத்திரை போகவில்லை... முன்னாள் முதல்வர் பெருமிதம்
By: Nagaraj Sat, 31 Dec 2022 9:51:27 PM
போபால்: உலக அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு தூரம் நடைபயணம் மேற்கொண்டதில்லை. இந்திய நாட்டிற்காக நேருவின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தியாகங்களைச் செய்ததில்லை. ராகுல் காந்தி பதவிக்காக நடக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை குறித்து, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த
எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி இருப்பார். அனைத்து
எதிர்க்கட்சிகளும் இணைந்து பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஒருமனதாக
தேர்வு செய்வார்கள். உலக அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு தூரம்
நடைபயணம் மேற்கொண்டதில்லை.
இந்திய நாட்டிற்காக
நேருவின் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தியாகங்களைச்
செய்ததில்லை. ராகுல் காந்தி பதவிக்காக நடக்கவில்லை. யாரை வேண்டுமானாலும்
ஆட்சியில் அமர்த்தும் அதிகாரம் உள்ள மக்களின் நலனுக்காக நடக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.