Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்கும் ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்கும் ராகுல் காந்தி

By: Karunakaran Fri, 02 Oct 2020 6:46:18 PM

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்கும் ராகுல் காந்தி

மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்கட்சிக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 3 வேளாண் சட்டங்ளுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தற்போது விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கொண்டுசெல்லவும் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளார். இதுகுறித்த தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

rahul gandhi,tractor rally,agricultural laws,congress party ,ராகுல் காந்தி, டிராக்டர் பேரணி, விவசாய சட்டங்கள், காங்கிரஸ் கட்சி

இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில், மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வால் தடுத்து நிறுத்த முடியாது. வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல் காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார் என்று கூறினார்.

ஏற்கனவே 3, 4, 5 ஆகிய தேதிகளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேரணி நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி தொடர் டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :